தமிழகம்

திமுக கவுன்சிலரின் கணவருக்கு அரிவாள் வெட்டு… திமுக ஆட்சியில் திமுகவினருக்கே பாதுகாப்பு இல்லையா?

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டில் பேரூராட்சிக்கு சொந்தமான கிணற்றில் மற்றொரு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் பைப் லைன் அமைப்பதற்கு 7 வது வார்டு திமுக கவுன்சிலரின் உமா மகேஸ்வரி கணவரான கோவிந்தன் என்பவர் டெண்டர் எடுத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பங்களா தெருவில் பைப்லைன் அமைத்துக் கொண்டிருப்பபோது அந்த பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவர் பைப்லைன் பள்ளத்தை உடனடியாக அகற்று என கவுன்சிலரின் கணவரான கோவிந்தனிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் ஏற்பட்டதில் திடீரென திமுக கவுன்சிலரின் கணவரை அரிவாளால் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் கவுன்சிலரின் கணவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர்.

மேலும் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

இதனை அறிந்த உறவினர்கள் திடீரென குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டுமென மும்முனை சந்திப்பில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி
சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பங்களா தெருவை சேர்ந்த வல்லரசு என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்

சங்கராபுரம் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜத் சதுர்வேதி மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

இது மட்டுமில்லாமல் இந்த பகுதியின் திமுக கவுன்சிலரின் கணவருக்கு அரிவாளால் வெட்டிய சம்பவத்தால் முக்கிய கடைவீதிகள் மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் திமுக ஆட்சியில் திமுக கவுன்சிலரின் கணவருக்கு அரிவாளால் வெட்டியதால் திமுகவினருக்கே பாதுகாப்பு இல்லை என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

10 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

12 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

13 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

13 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

14 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

15 hours ago

This website uses cookies.