நகராட்சிக்கு சொந்தமான பழைய தினசரி மார்கெட் கட்டிட இடுப்பாடு பொருட்களை ஏலம் விடுவதில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக தலைவரை எதிர்த்து திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. அதிமுக, திமுக, பாமக, பிஜேபி உள்ள கட்சிகளை சார்ந்தவர்கள் நகர் மன்ற உறுப்பினர்களாக உள்ளனர்
இதில் திமுகவை சேர்ந்த ஜானகி ராமசாமி என்பவர் தலைவராக உள்ளார். தற்பொழுது சத்தியமங்கலம் நகராட்சியில் சந்தை கடை என்ற இடத்தில் ஏற்கனவே இருந்த காய்கறி மார்க்கெட் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் இதற்கு முன்பு இருந்த தினசரி மார்கெட் உள்ளே இருந்த 100 ஆண்டு பழமையான விலை உயர்ந்த மரங்கள், பழைய கட்டிட மேற்கூரை பயன்பாட்டில் இருந்த ஆஸ்பெட்டாஸ் சீட்டுகள், இரும்பு பட்டா, மற்றும் இரும்பு குழாய்கள் இவற்றின் மதிப்பு சுமார் 10 லட்சத்திற்க்கும் அதிகமானதாகும்.
ஆனால் முறையாக நகர்மன்ற கூட்ட தீர்மானம் கொண்டு வராமல், எந்த நகர்மன்ற உறுப்பினர்களும் தெரியாமல் நகராட்சி நிர்வாகம் சார்பில் குறைந்த விலைக்கே ஏலம் விடப்பட்டுள்ளதாகவும் திமுக கவுன்சிலர்கள் உட்பட அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
இதில் வெளிப்படை தன்மை இல்லாமல் நகராட்சி தலைவருக்கு வேண்டிய ஒப்பந்ததாரர் மிக குறைந்த விலையில் விலைக்கு எடுத்து இதில் முறைகேடு நடந்ததாகவும் குற்றம் சாட்டி இன்று நகராட்சி அதிகாரிகளை எதிர்த்து திமுக, பாமக, அதிமுக, பிஜேபி உள்ளிட்ட கவுன்சிலர்கள் 20க்கும் மேற்பட்டோர் நகராட்சி மேலாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதே போல் நகராட்சி தலைவர் உறுப்பினர்களின் எந்த ஒரு அனுமதி பெறாமல் பல்வேறு டெண்டர்கள் மூலம் முறைகேடுகள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகின்றனர்
இதில் குறிப்பாக திமுக கவுன்சிலர்கள் திமுக தலைவரையே குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
This website uses cookies.