திருச்சி : திருச்சியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் இல்ல போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் 1569 முகாம்களில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 146 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. இம்முகாமை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு துவக்கி வைத்தார். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 247 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இந்த துவக்க விழா நிகழ்ச்சி திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட, 54 வது வார்டு திமுக கவுன்சிலர் புஷ்பராஜ், மற்றும் 55வது வார்டு கவுன்சிலர் ராமதாஸ் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் வந்திருந்தனர்.
இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். இதனால் தங்கள் முகத்தை காட்ட வேண்டும் என்பதால் யார் முன்னே நிற்பது என்ற தகராறு இவர்களுடையே ஏற்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர் சிவராசா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனை தொடர்ந்து வாய்த்தகராறு முற்றி திமுக கவுன்சிலர்களான புஷ்பராஜ் மற்றும் ராமதாஸ் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக, அவர்களது ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பிறகு அங்கு வந்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கி விட்டனர்.திருச்சி மாநகராட்சியில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வருகிற 2ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், அதிகாரம் கைக்கு வரும் முன்னே திருச்சியில் திமுக கவுன்சிலர்கள் அடாவடியில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். 47 வயதாகும் விஷால் இதுவரை திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
This website uses cookies.