கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தி.மு.க பிரமுகர் அண்ணாதுரை என்பவரின் மகன் தம்பிதுரை, குனியமுத்தூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்களிடம் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு வாங்கி தருவதாகவும், மேலும் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடமும் லட்சக் கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு உள்ளார்.
நீண்ட நாட்கள் கடந்தும், பணம் கொடுத்தவர்களுக்கு வீடும் கிடைக்கவில்லை, அரசு வேலையும் கிடைக்கவில்லை, இது குறித்து பாதிக்கப்பட்ட, பொதுமக்கள் அவரிடம் தொடர்ந்து கேட்டு வந்ததால், திடீரென தம்பிதுரை தலைமறைவானார்.
இதையும் படியுங்க: பாஜக பிரமுகரை கொல்ல சதி… பெட்ரோல் குண்டு வீச முயன்ற மர்மநபர் : கோவையில் பதற்றம்!
இந்த முறைகேடு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள். கோவை, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் நேற்று தம்பிதுரை தைப்பூசம் திருவிழாவிற்க்காக வீட்டிற்கு வந்ததை அறிந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டனர்.
நிலைமை மோசமாவதை உணர்ந்த குனியமுத்தூர் காவல்துறையினர் தம்பிதுரையின் வீட்டிற்கு வந்து கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.