திருப்பூர்: பல்லடம் அருகே சின்னகரையில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் திமுகவை சேர்ந்த மேஸ்திரி சிவகுமார் 50 என்பவரை பல்லடம் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் வீதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அதே பகுதியில் வசித்து வரும் திமுக பிரமுகரும் கட்டிட மேஸ்திரியுமான சிவகுமார் என்பவர் அச்சிறுமியை வீட்டினுள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. வீட்டுக்குச் சென்ற சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் அழுது கொண்டே நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தனர். பல்லடம் மகளிர் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து திமுக பொறுப்பாளரும் கட்டிட மேஸ்திரியுமான சிவகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பல்லடம் அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் போக்சோ சட்டத்தில் திமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
This website uses cookies.