கோவை : தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோவை பந்தய சாலை போலீசில் திமுக நிர்வாகி புகார் அளித்துள்ளார்.
கோவையில் உள்ள ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்ற திமுகவை சேர்ந்த பட தயாரிப்பாளர் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் கடந்த 9ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில் பாஜக மாநில தலைவர் ஆகிய அண்ணாமலை, தான் அரசியல் செய்வதற்காக தமிழக முதல்வரைப் பற்றி பல மேடைகளிலும் பல பொது இடங்களிலும் முன்னுக்குப்பின் தவறான செய்திகளை பகிர்ந்து வருகிறார். மேலும் தமிழக அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்களையும் ஊழல்வாதியாக சித்தரித்து பேசி வருகிறார். இவருடைய கருத்து பொது மக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிகப்பெரிய கட்சித் தலைவராக உள்ள இவர், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் தவறாக பேசி வருவதை தடை செய்து உத்தரவிட வேண்டும் எனவும், இவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து கைது செய்யுமாறும் பந்தய சாலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இவர் அளித்த புகாரில் பந்தய சாலை போலீசார் புகார் மனு ஏற்பு சான்றிதழ் (சி.எஸ்.ஆர்) வழங்கியுள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.