தூத்துக்குடி அருகே சட்ட விரோத மணல் கொள்ளையில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஈடுபட்டு வருவதாகவும், இதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பகுதிகளில் தனியார் பட்டா நிலங்களில் இருந்தும், அரசு புறம்போக்கு இடத்திலும் சட்டவிரோதமாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு சரள் கொள்ளை இரவும், பகலும் லாரிகளில் கடத்தப்படுகிறது. இதனால் அரசுக்கு பல கோடி ருபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கருங்குளம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டி சரள் மண் கடத்தி விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அரசிடம் இருந்து எந்த ஒரு அனுமதி சீட்டும் பெறாமல் சரள் மண்ணை கொள்ளையடித்து வருவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பருவநிலை காலங்களில் மழை நீர்வரத்து சரியாக வரமுடியாமல், ஒரே இடத்தில் தேங்கி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பை உண்டாக்கும் என்றும், உயிர் இழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்படும் என வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?, மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சிறப்பு கவனம் செலுத்தி இரும்பு கரம் கொண்டு சட்ட விரோத செயல்பாடுகளை தடுத்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும், சிறு கனிம விதிகளின் படியும், சட்ட விரோதமாக சரள் மண் திருடும் கும்பல் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் கைது செய்ய வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.
கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச்…
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
This website uses cookies.