பாஜகவுக்கு தாவிய திமுக நிர்வாகி.. காரில் இருந்து திமுக கொடியை அகற்றி பாஜக கொடியை வைத்த அண்ணாமலை!
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணம்பாளையம் பேரூராட்சியில் துணைத் தலைவராக இருந்து வருபவர் சண்முகம்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்று துணைத் தலைவராக இருந்து வருகிறார். இங்கு தலைவராக திமுக கட்சியைச் சேர்ந்த பெண் தலைவர் இருந்து வருகிறார். திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசனின் தம்பியின் மனைவி ஆவார்.
இந்நிலையில் துணைத் தலைவராக சண்முகம் பதவி ஏற்ற நாளிலிருந்து பேரூராட்சி தலைவருக்கு துணைத் தலைவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
இது தொடர்பாக திமுக மேலிடத்திற்கு பலமுறை தகவல் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் கட்சியிலிருந்து கட்சியில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திமுகவில் இருந்து பிரிந்து நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்திருந்த அண்ணாமலை முன்பாக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
முன்னதாக துணைத் தலைவர் சண்முகம் வீட்டிற்கு வருகை தந்த அண்ணாமலை துணைத் தலைவர் சண்முகத்திற்கு சால்வை அணிவித்து வரவேற்றார்,.
பின்னர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதால் அவரது காரில் இருக்கும் கட்சிக்கொடி அகற்றி பாஜக கட்சி கொடியை கட்டுமாறு அண்ணாமலை இடம் துணைத்தலைவர் பணித்துள்ளார்.
உடனடியாக அதை ஏற்றுக்கொண்ட அண்ணாமலை காரில் இருந்த கொடியை அகற்றி பாஜக கொடியை காரில் கட்டினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.