வண்டலூரில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்து வருபவர் ஆராமுதன். இவர் வண்டலூர் மேம்பாலம் கீழ்பகுதியில் கட்சி அலுவலகம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், வண்டலூர் மேம்பாலம் அருகே புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பேருந்து நிலையத்தை பார்ப்பதற்காக தனது காரில் ஆராமுதன் வந்தபோது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென நாட்டு வெடிக்கண்டுகளை காரின் மீது தூக்கி வீசி உள்ளனர்.
மேலும், தலை,கை, கால் என பல்வேறு பகுதிகளில் வெட்டியதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதையடுத்து தகவல் அறிந்து சென்ற ஓட்டேரி போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குரோம்பேட்டை மருத்துவமனையில் அவரது உறவினர்கள்,திமுகவினர் குவிந்து வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பாதுகாப்புகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திமுக பிரமுகரை மர்ம கும்பல் நாட்டு வெடி வீசி சம்பவம் வண்டலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக நிர்வாகியை வெட்டிக் கொலை செய்த கும்பலை பிடிக்க 2 உதவி ஆணையர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.