வண்டலூரில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்து வருபவர் ஆராமுதன். இவர் வண்டலூர் மேம்பாலம் கீழ்பகுதியில் கட்சி அலுவலகம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், வண்டலூர் மேம்பாலம் அருகே புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பேருந்து நிலையத்தை பார்ப்பதற்காக தனது காரில் ஆராமுதன் வந்தபோது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென நாட்டு வெடிக்கண்டுகளை காரின் மீது தூக்கி வீசி உள்ளனர்.
மேலும், தலை,கை, கால் என பல்வேறு பகுதிகளில் வெட்டியதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதையடுத்து தகவல் அறிந்து சென்ற ஓட்டேரி போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குரோம்பேட்டை மருத்துவமனையில் அவரது உறவினர்கள்,திமுகவினர் குவிந்து வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பாதுகாப்புகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திமுக பிரமுகரை மர்ம கும்பல் நாட்டு வெடி வீசி சம்பவம் வண்டலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக நிர்வாகியை வெட்டிக் கொலை செய்த கும்பலை பிடிக்க 2 உதவி ஆணையர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.