Categories: தமிழகம்

திமுக பிரமுகர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கண்டம்துண்டமாக வெட்டிப் படுகொலை : அரசியல் புள்ளிக்கு தொடர்புள்ளதாக உறவினர்கள் புகார்!

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியும் எச்சூர் ஊராட்சியின் திமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டோமினிக் அவரின் மகனும், திமுக கட்சியின் உறுப்பினருமான ஆல்பர்ட் (வயது‌ 25) என்ற இளைஞர் நேற்று எச்சூர் பகுதியிலுள்ள NASH கம்பெனி அருகே தனது நண்பர்கள் நால்வருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார் .

அப்போது அங்கு மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் 2 நாட்டு வெடிகுண்டுகளை ஆல்பர்ட் மீது வீசி சரமாரியாக வீசி முகம் மற்றும் தலைப்பகுதியில் அருவாளால் வெட்டி கொலை செய்து அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

உடனே அவரது நண்பர்கள் ஆல்பர்ட்டின் வாகனமான வேல்ஸ்கான் காரிலேயே ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ஆல்பர்ட் இறந்து விட்டதாக தெரிவித்துனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் ஆல்பத்தின் பிரேதத்தை மீட்டு ஸ்ரீ பெரும்புதூர் அரசு மருத்துவ சவக்கிடங்கில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

சடலத்தை ஸ்ரீபெரும்புதூர் பிரேத பரிசோதனை அறையில் வைத்தால் பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்திற்காக ஆல்பர்ட் உடலை செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

திமுக கட்சியைச் சேர்ந்த ஆல்பர்ட் மீது 15 க்கும் மேற்பட்ட அடிதடி கொலை முயற்சி போன்ற வழக்குகள் உள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்படுகிறது. மேலும் திமுக கட்சியை சார்ந்த ஸ்ரீபெரும்புதூர் பெருந்தலைவர் கருணாநிதிக்கும் (MBC) ஆல்பர்ட் க்கும் இடையே வார் நடப்பதாகவும் அதனால்தான் ஆல்பர்ட் (SC) வெட்டி படுகொலை செய்திருக்கலாம் எனவும் ஆல்பர்ட் தரப்பில் கூறப்படுகிறது.

சுங்குவார்சத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றார்கள் . அதே போல் ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி தலைமையில் ஒரு தனிப்படை மும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் ஒரு தனிப்படையும் சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் கார்த்திக் தலைமையில் ஒரு தனிப்படையும் என மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகிறார்கள்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

8 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

8 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

9 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

9 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

10 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

10 hours ago

This website uses cookies.