உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு திமுக பிரமுகர் செக்ஸ் டார்ச்சர் : நான் திமுக காரன்.. உன்னால ஒன்னும் பண்ண முடியாது என மிரட்டல்!!!
கணவனை இழந்த பெண்ணிற்கு செல்போனில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திமுக பிரமுகர் மீது ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கஸ்தூரி நகரைச் சேர்ந்தவர் ரோஜா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி மாற்றுத்திறனாளி மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவருடைய கணவர் இறந்து 11 வருடங்கள் ஆன நிலையில், இவர் கூலி வேலை செய்து, தன் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறார்.
இந்நிலையில், அதே பகுதியான காந்தி நகரைச் சேர்ந்த திமுக பிரமுகரான பிரபு என்ற இளைஞரிடம் ரோஜா, தனது மாற்றுத்திறனாளி பையனுக்கு, ஏதாவது மிதிவண்டி அல்லது ஏதாவது உதவி செய்து தரும்படி கேட்டுள்ளார். அதன் அடிப்படையில், சரோஜாவின் செல்போன் நம்பரை பெற்றுக் கொண்ட பிரபு, அவருக்கு தொடர்ந்து செல்போனில் அடிக்கடி செக்ஸ் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
அதன்பின், ரோஜா அவரது செல்போன் நம்பரை பிளாக் லிஸ்டில் போட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பிரபு, கடந்த சில தினங்களாக வீடியோ காலில் தொடர்பு கொள்வதும், பேசுவதும், வாட்ஸ் ஆப்பில் ஆபாச படங்களை அனுப்புவதும், ஆபாசமான வார்த்தைகளில் பேசுவதும், அவரது ஆபாச புகைப்படங்களை அனுப்புவதும் என தொடர்ந்து அவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.
மேலும், ‘நான் திமுக பிரமுகர் என்றும், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும், அதனால் நீ என் ஆசைக்கு இனங்கும் படியும், அப்படி இனங்காவிட்டால் உன்னை கொன்று விடுவேன் என்றும், உன் பிள்ளைகள் அனாதையாகிவிடும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பயந்து போன ரோஜா ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வேண்டியும், தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு தரக்கூடிய பிரபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக யுபிஎஸ்சி…
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
This website uses cookies.