நாமக்கல் அருகே பள்ளிபாளையத்தில் தொழில் போட்டியின் காரணமாக தனியார் நிதி நிறுவன உரிமையாளரை கும்பலுடன் சேர்ந்து மிரட்டும் நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். திமுக நிர்வாகியான இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதேவேளையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பள்ளிபாளையம் நகர் மன்ற துணைத் தலைவராக வெற்றி பெற்று செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், மாதேஸ்வரன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவன அலுவலகத்திற்கு சென்று உரிமையாளர் விஜய் என்கிற குமார் என்பவரை கடந்த 9ஆம் தேதி தொழில் போட்டியின் காரணமாக நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன் தனது ஆதரவாளர்கள் மற்றும் ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் யுவராஜ் ஆகியோருடன் சேர்ந்து, புதிதாக இருசக்கர வாகனத்திற்கு கடன் வழங்குவது உள்ளிட்ட தொழில் ரீதியாக இனி கடன் வழங்க கூடாது என மிரட்டல் எடுத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட தனியார் நிதி நிறுவன உரிமையாளர் குமார் கொடுத்த புகார் குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பராசக்தி ஹீரோ சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் சில…
ஸ்ரீக்கு என்ன ஆச்சு? சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ …
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
This website uses cookies.