கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான குளத்தை தூர்வாருவது தொடர்பாக கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலரை திமுக நிர்வாகி மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சி 14வது வார்டில் உள்ள சுப்பையார் குளம் 46 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரப்படுகிறதா அல்லது கிணறு வெட்டப்படுகிறதா..? குளம் தூர்வாரப்பட்டால் அந்த மண்ணை கொண்டு கரையை பலப்படுத்த வேண்டும். ஆனால் சுப்பையார் குளத்தில் இருந்து JCB இயந்திரம் மூலம் எடுக்கப்படும் மண், டெம்போ மற்றும் டாரஸ் லாரிகளில் மாநகராட்சி எல்லைகளை கடந்து, மாநகராட்சி தூய்மை பணி என்ற பெயரில் மாநகரை புழுதியாக்கி கொண்டு பயணிக்கிறது. என்னதான் நடக்கிறது என சமூக ஆர்வலர் ஷாஜி என்பவர் சமூக வலைத்தளங்களிலும் முகநூலிலும் பதிவிட்டிருந்தார்.
சுப்பையார் குளத்தை தூர்வாரும் ஒப்பந்தத்தை திமுக மாவட்ட சிறுபான்மை பிரிவில் இணை செயலாளராக பதவி வகித்து வரும் ஜெகன் என்பவர் நாகர்கோவில் மாநகராட்சி பணிகள் சிலவற்றை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறார். சம்பந்தப்பட்ட சுப்பையா குளத்தை தூர் வாரும் பணி என்ற போர்வையில் அதிக அளவில் மணல் கொண்டு செல்லப்படுவதாகவும், இது குறித்து மாநகராட்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர் ஷாஜி சமூக வலைத்தளங்கள் மற்றும் முகநூலில் கருத்து பதிவு செய்திருந்தார்.
இதற்கு திமுகவைச் சார்ந்த ஒப்பந்ததாரர் ஜெகன் சமூக ஆர்வலர் ஷாஜியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எனக்கு மாநகராட்சி முழுக்க முழுக்க சப்போர்ட் இருக்கு. எங்க தலைமையில் தான் அரசியல். எங்க ஆட்சி தான் நடக்குது. இப்படி பதிவு போடுவது புத்திசாலித்தனம் இல்ல. உன்னால ஒண்ணுமே என்ன செய்ய முடியாது. பதிவு போடறவங்க லைஃப் எல்லாம் எப்படி இருக்கும்னு பார்த்துகிட்டு தான் இருக்கேன். முடிந்தால் ஊருக்குள்ள வா. வந்து பேசு பார்ப்போம், என அவரை மிரட்டும் துணியில் பேசி இருக்கிறார். இது தொடர்பான ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.