தூத்துக்குடியில் வாடகைக்கு கூடி பெயர்ந்த வீட்டை, திமுக ஒன்றிய செயலாளர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக வீட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடி, கந்தன் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சாமி (70), சென்னையில் வசித்து வரும் நேசம் என்பவர் தூத்துக்குடி ஆசிரியர் காலனியில் வீடு ஒன்றை சாமியின் பொறுப்பில் விட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு ஒட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி பகுதியை சேர்ந்த இளையராஜா என்பவர் ஒட்டப்பிடாரம் திமுக ஒன்றிய தலைவர் மற்றும் அப்பகுதி பஞ்சாயத்து தலைவராகவும் உள்ளார்.
இவருக்கு சாமி வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளார். மாத வாடகை 22,000 ஆகும். அட்வான்ஸ் ஒரு லட்சம் கொடுத்திருந்தார். இந்த ஒப்பந்தம் இரண்டு வருடத்திற்கு முன்பே முடிந்து விட்டது. ஆகவே, வீட்டை காலி செய்ய நேசம் கூறியுள்ளார். ஆனால் இன்று வரை வாடகையும் தரவில்லை. வீட்டை காலி செய்யவும் மறுக்கிறார் இளையராஜா.
தற்போது இளையராஜா 3 கோடி மதிப்புள்ள இந்த வீட்டை 25 லட்சத்திற்கு கொடுக்கும்படி மிரட்டி வருகிறார். ஆகவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வீட்டை மீட்டு தருமாறு சாமி மனு அளித்துள்ளார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.