திண்டுக்கல் : கூட்டுறவுத் துறை அமைச்சர் மற்றும் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சரை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த திமுக கொடியால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் இன்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சமூக நலத்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர் .
இரண்டு அமைச்சர்களையும் வரவேற்பதற்காக திமுகவினர் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன்களில் திமுக கட்சி கொடியை வைத்திருந்தனர்.
இதற்கிடையே பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த அன்வர் என்பவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திமுக கொடி சாய்ந்ததில் அன்வர் வாகனத்தில் மோதி இருவரும் கீழே விழுந்தனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அன்வரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அரசு நிகழ்ச்சிக்காக அமைச்சர்களை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த திமுக கொடியால் விபத்து ஏற்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.