தென்காசி – சிவகிரியில் 600 கிலோ குட்கா பொருளை கடத்திய திமுக ஊராட்சி தலைவரின் கணவர் உள்பட 2 பேர் கைது
தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை பொருட்களின் புழக்கமும், கடத்தலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று எதிர்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தென்காசியில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட திமுக பிரமுகரை போலீஸ் கைது செய்தனர்.
மேலும் படிக்க: சிங்காரச் சென்னை திட்டத்தில் ரூ.500 கோடி முறைகேடு.. யானை பசிக்கு சோள பொறியா..? ஜெயக்குமார் ஆவேசம்..!!
மாவட்ட எல்லையான சிவகிரியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் வந்த காரை மடக்கி நடத்தப்பட்ட பரிசோதனையில், 600 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்கள் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, காரில் வந்தவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர், தென்காசி மாவட்ட ஊராட்சிமன்ற தலைவரான திமுகவை சேர்ந்த தமிழ்ச்செல்வியின் கணவர் சந்திர போஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சந்திர போஸ் மற்றும் கார் ஓட்டுநரை கைது செய்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், குட்கா போதைப்பொருளை கடத்திய திமுக நிர்வாகி சந்திர போஸை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.