தென்காசி – சிவகிரியில் 600 கிலோ குட்கா பொருளை கடத்திய திமுக ஊராட்சி தலைவரின் கணவர் உள்பட 2 பேர் கைது
தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை பொருட்களின் புழக்கமும், கடத்தலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று எதிர்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தென்காசியில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட திமுக பிரமுகரை போலீஸ் கைது செய்தனர்.
மேலும் படிக்க: சிங்காரச் சென்னை திட்டத்தில் ரூ.500 கோடி முறைகேடு.. யானை பசிக்கு சோள பொறியா..? ஜெயக்குமார் ஆவேசம்..!!
மாவட்ட எல்லையான சிவகிரியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் வந்த காரை மடக்கி நடத்தப்பட்ட பரிசோதனையில், 600 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்கள் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, காரில் வந்தவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர், தென்காசி மாவட்ட ஊராட்சிமன்ற தலைவரான திமுகவை சேர்ந்த தமிழ்ச்செல்வியின் கணவர் சந்திர போஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சந்திர போஸ் மற்றும் கார் ஓட்டுநரை கைது செய்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், குட்கா போதைப்பொருளை கடத்திய திமுக நிர்வாகி சந்திர போஸை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
This website uses cookies.