சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திமுக தருமபுரி மேற்கு மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் நல பிரிவு ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் முருகேசன் பேக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்த 15 வயது சிறுமி இரவு 7 மணியளவில் தனக்கு தலைவலி என தெரிவித்து அரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு, பின்பு தனது உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.
இதை கண்ட முருகேசன் உறவினர் வீட்டில் நான் விடுகிறேன் என தெரிவித்து சிறுமியை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். முருகேசன் திமுகவில் தர்மபுரி மேற்கு மாவட்ட அமைப்புசாரா நல பிரிவு ஓட்டுநர் அணியில் துணை அமைப்பாளராக உள்ளார்.
மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!
இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றபோது சிறுமியிடம் தவறுதலாக நடந்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. முருகேசனின் நடவடிக்கைகளை கண்ட இந்த சிறுமி வாகனத்தில் இருந்து இறங்கியபோது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளாராம்.
இது குறித்து தனது தாயிடம் தெரிவித்ததை தொடர்ந்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் அரூர் மகளிர் காவல் துறையினர் முருகேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.இந்த செய்தி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியைக்…
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
This website uses cookies.