திருச்சியில் கோவில் இடம் தொடர்பான பிரச்சனையில் திமுக பிரமுகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சின்னக்கடை வீதி அரபிகுள தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சுரேஷ்குமார் (45). திமுக பிரமுகரான இவர், அடகு நகைகளை மீட்டு விற்பனை செய்து வரும் நிறுவனத்தில் பங்குதாரர். இவருக்கு திருச்சி வடக்குத் தாராநல்லூர் பகுதியில் சொந்தமான பாலபத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது.
மேலும் படிக்க: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விரைவில் ஜாமீன்? தீர்ப்புக்காக காத்திருக்கும் I.N.D.I.A கூட்டணி!
இந்தக் கோவிலுக்கு அருகில் சுமார் 10,000 சதுர அடி இடம் உள்ளது. இந்த இடத்தை கோவில் நிர்வாகம் பராமரித்து வருகிறது. காந்தி மார்க்கெட்டில் பழக்கடை நடத்தி வரும் சரவணன் என்பவர் கோவில் நிர்வாகத்தில் பொருளாளராக பதவி வகித்து வருகிறார். இவர், சுரேஷ்குமாரின் நண்பரும் ஆவார். சரவணன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை விற்று விட்டதாக கோவில் கமிட்டியில் உள்ளவர்கள் சிலர் சுரேஷ்குமாரிடத்தில் புகார் கூறியுள்ளனர்.
ஆனால் இது குறித்து சுரேஷ்குமார் சரவணனிடம் எதையும் கேட்கவில்லை. இந்நிலையில், சுரேஷ்குமாரின் தூண்டுதலின் பெயரில் தான் இடம் தொடர்பான பிரச்சனையை கமிட்டியில் சிலர் எழுப்பி வருகின்றனர் என்ற கோபத்தில் சரவணன் நேற்று இரவு சுரேஷ்குமாரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துவிட்டு சென்றுள்ளார்.
மீண்டும் இன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் சரவணன் மற்றும் அவரது கடையில் பணிபுரியும் கார்த்திக் என்ற நபருடன் சுரேஷ்குமார் வீட்டுக்கு சென்று பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்து வீட்டின் மேல் வீசி உள்ளார். மேலும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சுரேஷ்குமாரின் இருசக்கர வாகனத்தையும் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் இருசக்கர வாகனம் தீயில் முற்றிலுமாக எரிந்து சேதமாகியது.
இச்சம்பவம் குறித்து சுரேஷ்குமார் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.