திருவள்ளூர் அருகே திமுக திண்ணைப் பிரச்சாரத்தின் போது, திமுக மகளிர் அணி மாநில பிரச்சாரக் குழுச் செயலாளர் சேலம் சுஜாதா திடீரென கெட்ட வார்த்தையில் பேசியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வல்லூர் பட்ட மந்திரி நந்தியம்பாக்கம் மேட்டுப்பாளையம் ஊராட்சிகளில் இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் திமுக அரசின் மூன்று ஆண்டுகள் சாதனைகளை துண்டு பிரசுரங்களாக வழங்கி திமுக கழக பேச்சாளரும், மகளிர் அணி மாநில பிரச்சார குழு செயலாளர் சேலம் சுஜாதா திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, பொதுமக்களிடம் பேசிக் கொண்டிருந்த அவர், கணவன்கள் மனைவியை கெட்ட வார்த்தையில் திட்டுவார்கள் என திடீரென கெட்ட வார்த்தையில் பேசி கூடியிருந்த பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என விமர்சித்த அவர், நேற்றைய மழையில் முளைத்த காளான் அண்ணாமலை, போலீஸ்காரர் மாதிரியே எல்லோரையும் மிரட்டி வருவதாகக் கூறினார். தொடர்ந்து பாரதப் பிரதமர் மோடியையும் அவர் விமர்சித்தார்.
இதில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம் எஸ்கே ரமேஷ் ராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
This website uses cookies.