திருவள்ளூர் அருகே திமுக திண்ணைப் பிரச்சாரத்தின் போது, திமுக மகளிர் அணி மாநில பிரச்சாரக் குழுச் செயலாளர் சேலம் சுஜாதா திடீரென கெட்ட வார்த்தையில் பேசியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வல்லூர் பட்ட மந்திரி நந்தியம்பாக்கம் மேட்டுப்பாளையம் ஊராட்சிகளில் இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் திமுக அரசின் மூன்று ஆண்டுகள் சாதனைகளை துண்டு பிரசுரங்களாக வழங்கி திமுக கழக பேச்சாளரும், மகளிர் அணி மாநில பிரச்சார குழு செயலாளர் சேலம் சுஜாதா திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, பொதுமக்களிடம் பேசிக் கொண்டிருந்த அவர், கணவன்கள் மனைவியை கெட்ட வார்த்தையில் திட்டுவார்கள் என திடீரென கெட்ட வார்த்தையில் பேசி கூடியிருந்த பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என விமர்சித்த அவர், நேற்றைய மழையில் முளைத்த காளான் அண்ணாமலை, போலீஸ்காரர் மாதிரியே எல்லோரையும் மிரட்டி வருவதாகக் கூறினார். தொடர்ந்து பாரதப் பிரதமர் மோடியையும் அவர் விமர்சித்தார்.
இதில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம் எஸ்கே ரமேஷ் ராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.