செய்யாறு சிப்காட் விவகாரம்.. பொய் வழக்கு போட்ட திமுக அரசு : விவசாயிகள் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு!!!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது யூனிட் விரிவாக்கத்துக்காக 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை தமிழ்நாடு அரசு கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிரே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மீதும் வழக்கு பதிவு செய்து ஏழு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் தமிழக முதலமைச்சர் அவருடைய அறிவுறுத்தலின் பேரில் ஆறு பேர் மீது குண்டச்சட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் அனைத்து தரப்பு விவசாயிகள் மீது இதுபோன்ற வழக்கு பதிவுகளை கண்டித்து இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் கலிவரதன் செயலாளர் முருகையன் பொருளாளர் நாகராஜன் உள்ளிட்டோர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.