மழை வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கும் திமுக அரசு : செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு!!
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2 லாரிகள் மூலம் அரிசி பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
நிவாரண பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்களை வழியனுப்பி வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ செய்தியாளரிடம் கூறுகையில் சென்னையில் 2015 ஆம் ஆண்டு 130 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத மழை பெய்தது, 2015 ல் ராணுவ தளபதி போல ஜெயலலிதா மீட்புப் பணிகளை செய்தார் என அனைவரும் பாராட்டினார்கள்.
சென்னை மழை வெள்ளத்தால் பல இடங்கள் தீவை போல காட்சி அளிக்கிறது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக அரசின் மீது கோபத்தில் உள்ளனர், தமிழகத்திலிருந்து சென்னைக்கு நிவாரண பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
நிவாரண பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் விலக்கு அளிக்க மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், 4000 கோடி செலவழித்ததற்கான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் விபரங்களை தமிழக அரசு மறைத்து வருகிறது. உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.