பாமக பிரமுகரின் கார் மீது நாட்டு வெடியை வீசிய திமுகவினர்.. சாலை மறியலால் பரபரப்பு!!
விழுப்புரம் மாவட்ட பாமக மாவட்ட செயலாளராக வழக்கறிஞர் பால சக்தி பதவி வகித்து வருகிறார்.
இவர் வருகின்ற 13 ஆம் தேதி விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் அனுமதி பெறுவதற்காக பாமக மாவட்ட செயலாளர் பால சக்தி தனது கார் மூலம் வந்த பொழுது பெரும்பாக்கம் என்ற பகுதியில் இவர் கார் சென்ற பொழுது அவ்வழியாக திமுகவைச் சேர்ந்த விழுப்புரம் எம்எல்ஏ டாக்டர். லட்சுமணன் மற்றும் திமுக வழக்கறிஞர் கல்பட்டு ராஜா ஆகியோர் வாக்கு சேகரிக்க செல்லும் பொழுது திமுகவினர் பட்டாசு வெடித்து உள்ளனர்.
அப்போது நாட்டு வெடியை தூக்கி பாமக மாவட்ட செயலாளர் பாலசக்தி கார் மீது வீசி உள்ளனர். இதனால் கார் சேதமடைந்தது.
திட்டமிட்டு அவர் கார் மீது வீசியதாக கூறி விழுப்புரம் எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் மற்றும் திமுக வழக்கறிஞர் கல்பட்டு ராஜா ஆகிய இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பாமகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி சுரேஷ் ஏடிஎஸ்பி தினகரன் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று காவல் துறையினர் உறுதியளித்ததன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் விழுப்புரம் திருக்கோவிலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.