திமுக எம்எல்ஏ சொன்னதுலாம் வேணாம்.. திமுககாரங்க சொல்றத கேளுங்க.. பிடிஓ அலுவலகத்தில் ரகளை!

Author: Hariharasudhan
7 March 2025, 1:00 pm

கள்ளக்குறிச்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளைத் தேர்வு செய்வதில், திமுக எம்எல்ஏ மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகளிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி: கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தில், கலைஞர் கனவு இல்​லத் திட்​டத்​தின் கீழ் 3,300 வீடு​களைக் கட்ட திட்​ட​மிடப்​பட்​டுள்ளது. இதற்​கான பயனாளி​களை, அந்​தந்த வட்டார வளர்ச்சி அலு​வலர்​கள் தேர்​வு செய்து, அதற்கான பணி ஆணை​களை வழங்கி வந்​தனர்.

அந்த வகையில், திரு​நாவலூர் ஊராட்சி ஒன்​றி​யத்​தில் 458 வீடு​கள் ஒதுக்​கீடு செய்யப்பட்டது. எனவே, இதற்​கான பயனாளி​களை அரசு அறி​வித்​துள்ள விதி​களின் படி தேர்வு செய்ய வேண்​டும் என உளுந்​தூர்​பேட்டை எம்​எல்​ஏவான மணிக்​கண்​ணன், வட்டார வளர்ச்சி அலு​வலரை (பிடிஓ) அறி​வுறுத்தி உள்ளா​ர்.

ஆனால், திமுக ஒன்​றியச் செய​லா​ளர்​களான வசந்​தவேல் மற்றும் முரு​க​ன் ஆகியோர், தாங்கள் சொல்​லும் நபர்​களுக்கே வீடு​களை ஒதுக்க வேண்​டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனால் குழப்பமடைந்த பிடிஓ உமாராணி, எம்​எல்ஏ சொன்னபடியே கடந்த மார்ச் 4அம் தேதி ஊராட்​சித் தலை​வர்​களை அழைத்து பயனாளிகளைத் தேர்வு செய்ய வலி​யுறுத்​தி​யிருக்​கி​றார்.

DMK

இதனை அறிந்த முரு​கன் மற்​றும் வசந்​தவேல் ஆதர​வாளர்​கள், திமுக கொடிகளோடு வந்து பிடிஓ அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்டு, நாற்​காலிகளை தூக்கி வீசி ரகளை செய்துள்ளனர். இதனால், தன்னை வேறு எங்​காவது பணிமாற்றம் செய்யும்படி பிடிஓ கோரி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: ஆணுறுப்பு அறுபட்ட நிலையில் கிடந்த நபர்.. திருநங்கையாகும் ஆசையில் மரணம்.. என்ன நடந்தது?

இந்த நிலையில், இது குறித்து திரு​நாவலூர் ஒன்​றியச் செய​லா​ளர் வசந்​தவேல் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “அதி​முக ஆட்​சி​யில் பசுமை வீடு​கள் திட்​டத்​தில் அதிமுகவினருக்கே ​வீடு​களை ஒதுக்​கி​னார்​கள் என்​பது ஊரறிந்த ரகசி​யம். அப்​படி இருக்​கை​யில், ஊராட்சி மன்​றத் தலை​வர் சொல்​றவ​ருக்​குத்தான் வீடு​களை ஒதுக்குவோம்னு கங்​கணம் கட்​டிக்​கிட்டு வேலை செய்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

அதேநேரம், இது தொடர்பாக எம்​எல்​ஏ மணிக்கண்​ணன் கூறுகையில், “முதல்மைச்சரின் கனவுத் திட்​டம் இது. அரசு என்ன விதி​களைச் சொல்லி உள்ளதோ, அதன்​படிதான் பயனாளி​கள் பட்​டியலை பிடிஓ தயார் செய்துள்ளார்கள். ஆனால், அவர்களை இப்​படிச் செய்​ய​லா​மா? ​இருப்பினும், ​கட்​சிக்​காரர்களை​யும் விட்​டு​விடாதீர்கள் என்று சொல்​லி​உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

  • Ilayaraja கண்ணே கலைமானே.. அரங்கேறிய இளையராஜா சிம்பொனி.. அதிர்ந்த அரங்கம்!
  • Leave a Reply