தமிழகம்

திமுக எம்எல்ஏ சொன்னதுலாம் வேணாம்.. திமுககாரங்க சொல்றத கேளுங்க.. பிடிஓ அலுவலகத்தில் ரகளை!

கள்ளக்குறிச்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளைத் தேர்வு செய்வதில், திமுக எம்எல்ஏ மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகளிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி: கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தில், கலைஞர் கனவு இல்​லத் திட்​டத்​தின் கீழ் 3,300 வீடு​களைக் கட்ட திட்​ட​மிடப்​பட்​டுள்ளது. இதற்​கான பயனாளி​களை, அந்​தந்த வட்டார வளர்ச்சி அலு​வலர்​கள் தேர்​வு செய்து, அதற்கான பணி ஆணை​களை வழங்கி வந்​தனர்.

அந்த வகையில், திரு​நாவலூர் ஊராட்சி ஒன்​றி​யத்​தில் 458 வீடு​கள் ஒதுக்​கீடு செய்யப்பட்டது. எனவே, இதற்​கான பயனாளி​களை அரசு அறி​வித்​துள்ள விதி​களின் படி தேர்வு செய்ய வேண்​டும் என உளுந்​தூர்​பேட்டை எம்​எல்​ஏவான மணிக்​கண்​ணன், வட்டார வளர்ச்சி அலு​வலரை (பிடிஓ) அறி​வுறுத்தி உள்ளா​ர்.

ஆனால், திமுக ஒன்​றியச் செய​லா​ளர்​களான வசந்​தவேல் மற்றும் முரு​க​ன் ஆகியோர், தாங்கள் சொல்​லும் நபர்​களுக்கே வீடு​களை ஒதுக்க வேண்​டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனால் குழப்பமடைந்த பிடிஓ உமாராணி, எம்​எல்ஏ சொன்னபடியே கடந்த மார்ச் 4அம் தேதி ஊராட்​சித் தலை​வர்​களை அழைத்து பயனாளிகளைத் தேர்வு செய்ய வலி​யுறுத்​தி​யிருக்​கி​றார்.

இதனை அறிந்த முரு​கன் மற்​றும் வசந்​தவேல் ஆதர​வாளர்​கள், திமுக கொடிகளோடு வந்து பிடிஓ அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்டு, நாற்​காலிகளை தூக்கி வீசி ரகளை செய்துள்ளனர். இதனால், தன்னை வேறு எங்​காவது பணிமாற்றம் செய்யும்படி பிடிஓ கோரி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: ஆணுறுப்பு அறுபட்ட நிலையில் கிடந்த நபர்.. திருநங்கையாகும் ஆசையில் மரணம்.. என்ன நடந்தது?

இந்த நிலையில், இது குறித்து திரு​நாவலூர் ஒன்​றியச் செய​லா​ளர் வசந்​தவேல் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “அதி​முக ஆட்​சி​யில் பசுமை வீடு​கள் திட்​டத்​தில் அதிமுகவினருக்கே ​வீடு​களை ஒதுக்​கி​னார்​கள் என்​பது ஊரறிந்த ரகசி​யம். அப்​படி இருக்​கை​யில், ஊராட்சி மன்​றத் தலை​வர் சொல்​றவ​ருக்​குத்தான் வீடு​களை ஒதுக்குவோம்னு கங்​கணம் கட்​டிக்​கிட்டு வேலை செய்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

அதேநேரம், இது தொடர்பாக எம்​எல்​ஏ மணிக்கண்​ணன் கூறுகையில், “முதல்மைச்சரின் கனவுத் திட்​டம் இது. அரசு என்ன விதி​களைச் சொல்லி உள்ளதோ, அதன்​படிதான் பயனாளி​கள் பட்​டியலை பிடிஓ தயார் செய்துள்ளார்கள். ஆனால், அவர்களை இப்​படிச் செய்​ய​லா​மா? ​இருப்பினும், ​கட்​சிக்​காரர்களை​யும் விட்​டு​விடாதீர்கள் என்று சொல்​லி​உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

7 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

8 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

9 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

9 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

10 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

11 hours ago

This website uses cookies.