பெரம்பலுாரில், நேற்று, பா.ஜ., கட்சியின் தரவு மேலாண்மை பிரிவு (ஐ.டி.,விங்) சார்பில், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற பா.ஜ., கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தி.மு.க., தலைவர் உட்பட கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களும், ஹிந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தும் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.
சமீபத்தில், சிதம்பரம் நடராஜர் குறித்து, சமூக வலைதளங்களில் அவதுாறாக பேசியவர்கள் மீது புகார் கொடுத்தும், அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது போல், அவதுாறாக பேசுபவர்களுக்கு மறைமுகமாக, பின்னணியில் ஆதரவு கொடுக்கும் அரசாக உள்ளது. இந்த அரசு ஒரு சாராருக்கு ஆதரவாக இருப்பதை, மக்களிடம் பா.ஜ.க, கட்சி எடுத்துச் சொல்லும்.
உண்மையிலேயே தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்றால், முன்னணியில் இருந்து ஆர்ப்பாட்டமும், அரசியலும் இல்லாமல் பணி செய்யும் இயக்கத்தை திருமாவளவன் ஆதரிக்க வேண்டும். பா.ஜ.க, கட்சியில், பட்டியல் இனத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
போதைப் பொருளை ஒழிக்க வேண்டும், என முதல்வர் பேசிக்கொண்டு, வீதிக்கு வீதி டாஸ்மாக் கடையை திறந்து வைத்து, இரட்டை வேடம் போடுகிறார்.
தி.மு.க., ஆட்சியில் பல ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்ற கூட முடியாமல் உள்ளனர். தி.மு.க., என்றாலே இரட்டை வேடம் தான். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
ஆரவார வரவேற்பில் ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்தை…
கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கேவி பேட்டை பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் மது…
This website uses cookies.