Categories: தமிழகம்

‘இதுக்கு கம்யூனிஸ்ட் லாக்கி இல்ல‘ : தலைமையை மீறி சுயேட்சையாக களமிறங்கிய திமுக பிரமுகர் : கூட்டணியில் சலசலப்பு!!

தென்காசி : கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டில் திமுக பிரமுகர் சுயேட்சையாக களமிறங்கி வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் திமுகவினரை கதிகலங்க செய்துள்ளது.

வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற வாய்ப்புள்ள இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டதாக பல இடங்களில் மாவட்ட செயலாளர்கள் மீது திமுகவினர் கடும் கோபத்தில் உள்ளனர். பல இடங்களில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சங்கரன்கோவிலில் உள்ள மொத்தம் 30 வார்டுகளில் நகராட்சியை கைப்பற்ற திமுக – அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் 8வது வார்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் 8வது வார்டு தனக்குதான் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்த திமுக பிரமுகர் சரவணக்குமா, கடந்த தீபாவளி பண்டிகையில் இருந்தே வீடு வீடாக இனிப்புகளை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

ஆனால் 8வது வார்டை கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட்டுக்கு திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் ஒதுக்கியுள்ளார். இதனால் திமுக பிரமுகர் சரவணக்குமார் கடும் கோபத்தில் இருந்துள்ளார். வார்டை விட்டு கொடுக்குமாறும், அடுத்தடுத்து கூட்டுறவு சங்கங்களில் பொறுப்புகள் தரப்படும் என பேச்சுவார்த்தை நடத்தியும் சரவணக்குமார் சமாதானம் ஆகவில்லை.

இதற்கு காரணம், 8 வது வார்டில் சரவணக்குமாரின் தந்தை 20 ஆண்டுகள் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளதால் அவரை தொடர்ந்து களப்பணியாற்ற விரும்பியுள்ளார். இந்த செண்டிமெண்டை வைத்து தான் வென்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் ஆனது ஆகட்டும் என கருதி சரவணக்குமார் சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். வேட்பு மனுவை தாக்கல் செய்து வீடு வீடாக பிரச்சாத்தை துவக்கியுள்ளார். இவருக்கு அந்த பகுதியல் மவுசு அதிகம் என்பதால் திமுகவினரும், தோழமை கட்சியினரும் கலக்கத்தில் உள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சூப்பர் ஹீரோ திரைப்பட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கப்போகும் சீனா?

வணிக போர் சீனா மீதான வணிகப் போரை தொடங்கியிருக்கிறது அமெரிக்கா. இந்த இரு நாடுகளும் உலகின் மிகப் பெரிய சக்தி…

22 minutes ago

தனியாக இருந்த சிறுமி பாலியல் வன்கெடுமை.. பனியன் தொழிலாளர்களுக்கு காத்திருந்த ஷாக்!

திருப்பூர் கோவில்வழியை சேர்ந்தவர்கள் பாபு(வயது 47), இளையராஜா(38). பனியன் நிறுவன தொழிலாளர்கள். கொரோனா காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருந்த 15…

37 minutes ago

தமிழ் மட்டுமே உயிர் மூச்சு… காமராஜரின் தொண்டன் : கடைசி வரை கட்சி மாறாத குமரி அனந்தன்!

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…

3 hours ago

நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம்.. வெடிகுண்டை வீசிய மர்மநபர்கள் யார்?

நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்எல்ஏவாக…

3 hours ago

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

16 hours ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

16 hours ago

This website uses cookies.