கும்முடிபூண்டியில் திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளரிடம் புதிய நிர்வாகிகளை முறையாக நியமனம் செய்யவில்லை என எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் கும்மிடிப்பூண்டியில் மாவட்ட கழக செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் முன்னிலையில் கடந்த வாரம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அப்போது, ஒன்றிய கழக செயலாளர் ஆனந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து கட்சி நிர்வாகிகள் தங்களிடம் உரிய கருத்துகளைக் கேட்காமலே தேர்ந்தெடுத்ததாகவும், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என கூறினார்.
இதனால், கூட்டத்தில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் விளக்கம் அளித்து கூட்டத்தை அமைதிப்படுத்தி நடத்தினார்.
திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.