திமுக நகர்மன்ற தலைவரை கண்டித்து திமுகவினரே போராட்டம் : மறைந்த திமுக தலைவரின் சொந்த மாவட்டத்தில் அவலம்!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி 27 வது வார்டு பகுதியில் சாலை வசதி,குடிநீர், மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர கோரி அப்பகுதி மக்கள் நகரமன்ற தலைவர் சோழராஜனிடம் மனு கொடுத்தனர்.
தங்கள் கோரிக்கைகள் மீது நகரமன்ற தலைவர் நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவித்ததாக கூறி 27 வது வார்டு பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் மன்னார்குடி திருவாரூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு வந்த திமுக நகர செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் சமாதானப்படுத்திய நிலையில் மறியல் கைவிடப்பட்டது. மன்னார்குடி நகராட்சியின் நகர மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த மண்ணை சோழராஜன் என்பவர் உள்ளார் இவரை கண்டித்து திமுகவினரே மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
This website uses cookies.