கடந்த 26ம் தேதி கரூர், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் சோதனைக்கு வந்தனர்.
சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது இப்பகுதியில் திமுகவினர் நூற்றுக் கணக்கானோர் திரண்டனர். சோதனைக்கு வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தள்ளு, முள்ளும் ஏற்பட்டது.
அப்போது, அதிகாரிகள் சோதனைக்கு வந்த கார் கண்ணாடியை உடைததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் மாறி, மாறி புகார் அளித்துள்ளனர். இரு தரப்பினரும் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் வருமான வரித்துறையினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திமுகவினர் 6 பேரை கரூர் மாநகர போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல தான்தோன்றி மலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
தற்பொழுது வரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும், இது தொடர்பாக பலரும் கைது செய்யப்படலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.