தஞ்சை ; மண் அள்ளுவதில் விதிகளை மீறிய விவகாரத்தில் திமுக எம்எல்ஏவை பட்டுக்கோட்டை டிஎஸ்பி விளாசிய ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திட்டக்குடி கிராமத்தில் உள்ள குளத்தில் மண் அள்ளுவதில் விதிகளை மீறி எடுத்ததாகவும், ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் மண் அள்ளியதாக லாரிகளை பட்டுக்கோட்டை போலீசார் சிறைபிடித்தனர். இதை அறிந்த திமுக எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான அண்ணாதுரை, பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாலாஜியை தொடர்பு கொண்டு, தாசில்தாரிடம் பேசி பிரச்சனையை முடித்துக் கொண்டதாக கூறியுள்ளார்.
எனவே, சிறைபிடித்த வாகனங்களை விடுவிக்குமாறும், மேல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்று முதலில் சாதுவாக கூறியுள்ளார். ஆனால், டிஎஸ்பி பாலாஜி, விஷயம் மேலிடம் வரை சென்று விட்டதால், வாகனங்களை விட முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், கொதித்து போன திமுக எம்எல்ஏ அண்ணாதுரை, சட்டம் எல்லாம் எங்களுக்கும் தெரியும்.. உங்களால் முடிந்ததை செய்து பாருங்கள், எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், திமுக எம்எல்ஏ அண்ணாதுரை டிஎஸ்பியிடம் பேசிய ஆடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
This website uses cookies.