விளாத்திகுளம் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரை, குடிபோதையில் தாக்கிய திமுக தொண்டர் மீது – நடவடிக்கை வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட எம்எல்ஏ பெருந்தன்மையுடன் விட்டுச் சென்றுள்ளார்.
கர்ம வீரர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வே.பாண்டியபுரம் கிராமத்தில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த (திமுக) விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை, தருவைக்குளத்தைச் சேர்ந்த திமுக தொண்டர் அதிர்ஷ்டராஜ் என்பவர் குடிபோதையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை முதுகில் அடித்த திமுக தொண்டருக்கு எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். பின் தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் குடிபோதையில் இருந்த அதிர்ஷ்டராஜை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், “அவரை குடிபோதையில் அடித்த அதே கட்சியைச் சேர்ந்த திமுக தொண்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பெருந்தன்மையோடு தெரிவித்தாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அங்கு அமைந்துள்ள காமராஜரின் திருவுருசலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திச் சென்றார்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
சூப்பர் ஸ்டார் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை எவராவது நேரில் பார்த்தால் மரியாதை தானாக வரும் என்று…
இரவு தூங்கச் சென்ற இளைஞர் அதிகாலையில் சடலமாக அறையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மீரட் பகுதியில்…
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரகசிய தகவல் அடிப்படையில் போதை தடுப்பு போலீசார்…
தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையை முன்னிட்டு, அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி…
விஜய்க்கு ஃபத்வா… விஜய் கடந்த மாதம் சென்னை ஒய் எம் சி ஏ பள்ளிவாசலில் பல இஸ்லாமியர்களுடன் ரமலான் நோன்பில்…
This website uses cookies.