பிரதமர் மோடியை திமுக எம்எல்ஏ ஒருவர் ஒருமையில் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் – கீழ்கதிர்பூர் கிராமத்தில் வட்டார பொதுநிதியில் இருந்து சீரமைக்கப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழாவில் காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ எழிலரசன் நேற்று கலந்து கொண்டார்.
அப்போது, ரேஷன் கடை திறப்பு விழா முடிந்த பிறகு, நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், திமுக எம்எல்ஏ எழிலரசனை முற்றுகையிட்டு, மகளிர் உரிமைத் தொகை தங்களுக்கு வரவில்லை என்று சரமாரி கேள்வி எழுப்பினர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேனு சொன்னாரு-ல, அவரே கேட்டீங்களா..? என்று கூறி பிரதமர் மோடியை ஒருமையில் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகளின் கடன் விவரங்களைக் குறிப்பிட்டு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அண்ணாமலை கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை:…
கோவையில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, கேரளாவுக்குச் சென்று கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்: கோவை…
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி பட டீசரை பார்த்த நடிகர் விஜய் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.…
தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டிய பாலா தமிழ் திரைப்பட உலகில் பழம்பெரும் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ்,அண்மைக் காலமாக கடுமையான…
தெலுங்கானாவில் காதலை கைவிடச் சொன்ன காதலியின் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ற காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.…
This website uses cookies.