கரூர் அருகே கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கலந்துகொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்த நிகழ்வுக்காக ரேஷன் கடைக்கு சட்டவிரோதமாக மின்சாரம் திருடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், ஏமூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏமூர் புதூர் பகுதியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி கலந்து கொண்டு, நியாய விலை கடையை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
புதிய நியாய விலை கடை கட்டுமான பணி முடிந்து, தற்போது வரை மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், திறப்பு விழாவிற்காக கூட்டுறவுத்துறை ஊழியர்கள் கடைக்கு பின்புறம் அமைந்துள்ள மின் கம்பத்திலிருந்து, சட்டவிரோதமாக கேபிள்களை மாட்டி மின்சாரத்தை எடுத்துள்ளனர்.
மேலும், நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி உரையாற்றிக் கொண்டிருக்கும் போது நியாய விலை கடை பெயர் பலகை வண்ணம் பூசும் பணியில் ஊழியர் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.