திருப்பூர் மாவட்டத்தில், வளர்ச்சி்த்திட்ட பணிகளை துவக்கி வருகை தந்த நீலகிரி எம்.பி ராசா முற்றுகையிட்ட பெண்கள், நூறு நாள் வேலைத்திட்டத்தில் கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஆலத்தூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், ரூ.1.25கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சமுதாயநலக்கூடம், அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட 3வது வார்டு ஏரித்தோட்டம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1.21 கோடி மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி, 16,17, 18வது வார்டு சாலை மையப்பகுதியில் ரூ.45 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மின் விளக்குகளை திறந்து வைத்தல் என மொத்தம் ரூ.2 கோடியே 91 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி எம்.பி ஆ. ராசா துவக்கி வைத்தார்.
அப்போது, அங்கிருந்த பெண்கள, நூறு நாள் வேலைத்திட்டத்தில் கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், ஆலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேருந்து வசதி இல்லை எனவும் ஆ. ராசாவிடம் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பந்தபட்ட துறை அலுவலரை அழைத்து விபரங்களை கேட்டறிந்த எம்.பி., கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
தொடர்ந்து, நபர் ஒருவர் கேள்வி கேட்க, ஆத்திரமடைந்த ஆ.ராசா, ‘இரு-யா போன் போட்டுட்டு இருக்கோம்’ என சத்தம் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விண்வெளி நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் விண்வெளி நாயகன் என்று அவரை இப்போது…
விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…
நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
This website uses cookies.