வாயை விட்டு வாங்கி கட்டிக்கொள்ளும் திமுக எம்பி ஆ.ராசா : வ.உ.சி குறித்து சர்ச்சை பேச்சு.. போராட்டம் நடத்த முடிவு!
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினரான ஆ.ராசா கூட்டம் ஒன்றிய செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் குறித்து கருத்து வெளியிட்டார்.
இது வெள்ளாளர் சமுதாயத்திடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆ.ராசா தேச விடுதலைக்காக பாடுபட்ட தியாகி சிதம்பரனார் பற்றி பேசியது தவறு என்று தெரிவித்து ஆங்காங்கே கூட்டங்கள் நடைபெற்றது.
பழனி அடிவாரம் பாளையம் தனியார் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை பழனி நகர, ஒன்றிய வேளாளர், வெள்ளாளர் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் 13 சங்கங்களின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
கூட்டத்தில் வ.உ.சிதம்பரனார் குறித்து அவதூறு பேசிய ராசாவை கண்டித்து விரைவில் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழனி வ.உ.சி. பேருந்து நிலையம் அருகே சிதம்பரனாரின் முழு உருவசிலை அமைக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், ஆர்விஎஸ் மஹால் ஆனந்தன், அரிசி ஆலை சுப்பிரமணியன், ஆடலூர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.