பாஜக அரசு தமிழகத்துக்கு ஏற்படுத்தும் துரோகங்கள் குறித்து திண்ணை பிரச்சாரம் மட்டுமில்லாமல் தனி நபர் பிரச்சாரத்திலும் ஈடுபட வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு எம்பி கனிமொழி வேண்டுகோள் விடுத்தார்.
தூத்துக்குடி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது. இதில் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆயிரக்கணக்கான மகளிர் கலந்து கொண்டனர்.
இதில் திமுக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமானகனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, வரும் பாராளுமன்றத் தேர்தலில் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்து பேசினார்.
அப்போது, அரசின் மகளிருக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட கனிமொழி கருணாநிதி எம்பி, மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழக அரசு மகளிருக்காக வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நிதி நெருக்கடி உருவாக்கும் சூழலை ஏற்படுத்தி விடுவார்கள் என்பதால், திமுக மகளிரணி திண்ணை பிரச்சாரம் மட்டும் இல்லாமல், தனி நபர் பிரச்சாரத்திலும் ஈடுபட வேண்டும் தங்களது உறவினர்களுடன் பேசும்போதும் அரசியல் பேசுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நாட்டின் கைகளை உயர்த்துவது பெண்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது. எனவே, அத்தனை பேரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் நமது வாழ்க்கைத் தரம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் உயரும், என எம்பி கனிமொழி பேசினார்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.