Categories: தமிழகம்

மக்களை அடக்கி வைக்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு முதல் அடி… புத்தக திருவிழாவில் திமுக எம்பி கனிமொழி பேச்சு..!!

தூத்துக்குடி ; மக்களை அடிமையாக வைத்திருக்க முடியும் என்று அதிகாரத்திலேயே இருக்கக்கூடியவர்கள் நினைக்கக் கூடியது புத்தகம் என்று தூத்துக்குடியின் 3வது புத்தகத் திருவிழா துவங்கி வைத்து எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 3வது புத்தகத் திருவிழாவை திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, புத்தகங்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். புத்தகத் திருவிழாவில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 3வது புத்தகத் திருவிழா 2022 இன்று (22/11/2022) முதல் 29-ந் தேதி வரை 8 நாட்கள் தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் உள்ள ஏ.வி.எம்.கமலவேல் மகாலில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. இதில் 70-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. புத்தகத் திருவிழாவில் தினமும் தமிழகத்தில் உள்ள சிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. தினமும் பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும் தினமும் மாலை வேளையில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.

இந்நிகழ்ச்சியில் கருணாநிதி எம்.பி பேசுகையில், புத்தகங்கள் என்பது இன்னொரு உலகம் படிக்க படிக்க பல உலகங்களை கொண்டு வந்து சேர்க்கக் கூடிய ஒன்றுதான் புத்தகம். புத்தகங்கள் நமது சிந்தனையை தூண்டும். அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் தொடர்ந்து பயந்த விஷயங்கள் புத்தகங்கள் தான்.

அதற்காக புத்தகங்கள் தடை செய்யப்பட்டது, எழுத்தாளர்கள் தடை செய்யப்பட்டனர். சிறைக்கு அனுப்பப்பட்டனர். லைப்ரரி தீயிட்டு கொளுத்தப்பட்டது என்றார். இதன் மூலம் மக்களை அடிமையாக வைத்திருக்க முடியும் என்று அதிகாரத்திலேயே இருக்கக்கூடியவர்கள் நினைக்கக் கூடியது புத்தகம்.

எல்லாவற்றையும் தாண்டி மக்களை அடக்கி வைக்க முடியும் ஒடுக்கி வைக்க வேண்டும் என்று நினைத்த சமூகங்கள் அத்தனையும் முதலில் தாக்கியது புத்தகங்களின் எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் தான், அது இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. இன்றும் அதே நிலை உள்ளது. இதன் மூலம் புத்தகத்தின் வீரியத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். எந்த காலகட்டத்திலும், உறுதுணையாக உற்ற துணையாக, ஒரே துணையாக உண்மையான துணையாக இருக்கக்கூடியது புத்தகங்கள். அதனால், படியுங்கள் உங்களுடைய உலகை மிக விரித்ததாக எல்லாவற்றையும் கடந்ததாக மாற்றிக் கொள்ளுங்கள், என்றார்.

3வது புத்தகத் திருவிழாவில், திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

விரக்தியில் வெங்கட் பிரபு எடுத்த முடிவு…சாதகமாக அமையுமா..!

"சென்னை 28" மூன்றாம் பாகம் வருகிறதா? கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு,தன்னுடைய திரைப்பயணத்தை நடிகராக தொடங்கினார்.உன்னை சரணடைந்தேன்,ஏப்ரல் மாதத்தில்,சிவகாசி உள்ளிட்ட…

7 hours ago

ரிலீஸ் ஆனது ‘குட் பேட் அக்லி’ தீம் மியூசிக்..ரிப்பீட் மோடில் கேட்கும் ரசிகர்கள்.!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி,ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர்…

8 hours ago

ரசிகர்களின் ஆறாத வடு..25 வருடத்திற்கு முன்னாடி நடந்த சம்பவம்..பதிலடி கொடுக்குமா இந்தியா.!

இந்திய அணியின் மறக்க முடியாத தோல்வி! கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா…

9 hours ago

6 மாசத்துக்கு எதுவும் கேட்காதீங்க.. திடீரென மாறிய தமிழிசை முகம்!

பாஜக - அதிமுக கூட்டணி குறித்து 6 மாதத்திற்கு எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம் என தமிழிசை செளந்தரராஜன்…

9 hours ago

போராடும் ‘காக்கா முட்டை’ பட சிறுவன்…கனவு நிறைவேறுமா.!

பட வாய்ப்புக்காக அலையும் காக்கா முட்டை ரமேஷ் தமிழ் சினிமாவில் 2015-ஆம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘காக்கா…

10 hours ago

செங்கல் சூளையில் கேட்ட அலறல் சத்தம்.. தப்பியோடிய காதல் கணவர்!

திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியைக் கொலை செய்து விட்ட தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.…

10 hours ago

This website uses cookies.