நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இன்று மாலை விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.பின் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக அவர் நீலகிரி செல்கிறார்.
இந்நிலையில் இந்து பெண்களை அவமதிக்கும் விதமாக நீலகிரி எம்.பி. ஆ. ராசா பேசியதாக கூறி அவருக்கு கருப்பு கொடி காட்ட பாஜகவினர் காளப்பட்டி நேரு நகர் பகுதியில் கூடினர்.
இதனை அடுத்து அந்த பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் பா.ஜ.க மகளிர் அணியினரும், அக்கட்சி தொண்டர்கள் என 50″க்கும் மேற்பட்டோர் நேரு நகர் பகுதியில் கருப்புக் கொடி காட்ட திரண்டதுடன் , ஆ.ராசாவிற்கு எதிராக கருப்பு கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க மகளிர் அணியினர் உட்பட 50″க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இதனிடையே துணை பொது செயலாளராக பொறுப்பேற்ற பின் கோவைக்கு வரும் ஆ.ராசாவை கோவை விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க திமுகவினரும், திராவிட இயக்கத்தினரும் வரவேற்க தி்ரண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.