Categories: தமிழகம்

முதலமைச்சரிடம் நல்ல பெயர் வாங்க அரசு விழா பூஜையை தடுத்து நாடகம் : திமுக எம்பி மக்களிடம் மன்னிப்பு கேட்டே ஆகனும் : இந்து முன்னேற்றக் கழகம்

இந்து அறநிலையத்துறை கோவிலை விட்டு வெளியே வரவேண்டும் என்று இந்து முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் வலியுறுத்தியுள்ளார்.

இந்து முன்னேற்றக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் சிவனடியார்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் மாநில தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் தலைமையில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் கோபிநாத் செய்தியாளர்களுக்கு பேட்டியில் கூறியிருப்பதாவது :- கடந்த சில மாதங்களாக திராவிட மாடல் என்ற போர்வையில் தமிழக அரசு மோசமாக செயல்பட்டு வருகிறது. ஓட்டுக்காகவும், ஆட்சி பிடிப்பதற்காக ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் விதமாக சிறுபான்மையினருக்கு சலுகைகளை வாரி வாரி வழங்கிக் கொண்டு ஹிந்துக்களை புறக்கணிக்கின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால் இந்துக்கள் ஓட்டு பெறாமல் யாரும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை இதன் மூலம் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன். இரண்டு நாளைக்கு முன்பு தர்மபுரியில் எம்பி செந்தில்குமார் Pwd நிகழ்ச்சிக்குச் சென்று காலங்காலமாக நிகழ்ச்சியை தொடங்கும் முன்பு பூமி பூஜை போட்டுத்தான் துவங்குவார்கள்.
அதன் அடிப்படையிலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதில் எந்த மதசார்பு இல்லாமல் இருந்த நிலையில் முதல்வரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக இந்துக்களை கேவலப்படுத்தி உள்ளார். எனவே எம்பி செந்தில்குமார் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து இந்து அமைப்புகளும் தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். டிஜிபி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது என்று சொல்லி மறுநாளே தமிழகத்தில் எங்காவது இடத்தில் கொலை நடந்து விடுகிறது.

எனவே உளவுத்துறைகளை முடுக்கி விட்டு தமிழகத்தில் நடைபெற உள்ள பிரச்சனைகளை முன்னறிந்து தீர்வு காண வேண்டும். கள்ளக்குறிச்சியில் மாணவி மரணம் குறித்து தீர விசாரித்து உரிய ஆய்வு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும்.

இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இடங்களை மீட்டு எடுக்க என்று கூறி ஒரு மாயை சித்தரிக்கிறார். இஸ்லாமியர்கள் மசூதியும், கிறிஸ்தவர்களின் சர்ச்சை எப்படி கொள்கையின்படி நடக்கிறதோ இந்துக்கள் கோவில்களை இந்துக்களிடம் திரும்பிக் கொடுக்க வேண்டும். இந்து அறநிலையத்துறை கோயிலை விட்டு வெளியேற வேண்டும்.

ஜாதியை வைத்தும் மதங்களை வைத்தும் பிழைப்பு நடத்துபவர்கள் திருந்திக் கொள்ள வேண்டும். ஜாதி அரசியல் செய்யும் தலைவர்கள் எல்லாம் ஒரு பட்சமாய் செயல்பட்டால் எதிர்காலத்தில் இந்துக்கள் அனைவருமே தக்க பதிலடி கொடுப்பார்கள். திருமாவளவன் எந்த கூட்டத்தில் பேசினாலும் சம்பந்தமில்லாமல் சனாதனம், மதம் எனும் பேசுகிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திருமாவளவன் இதுவரை என்ன செய்திருக்கிறார் என்றால் அதற்கு பதில் இல்லை.

இந்து முன்னேற்ற கழகம் விடுகிற சவால் என்ன என்றால் யாரெல்லாம் சனாதனத்தை எதிர்க்கின்றனரோ ஒரு மேடை போட்டால் அவர்களிடம் விவாதிக்க தயார், என தெரிவித்தார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…

தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…

28 minutes ago

என் மேல நம்பிக்கை வச்சதுக்கு மிக்க நன்றி அஜித் சார்- அர்ஜுன் தாஸ் உருக்கம்

வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…

1 hour ago

‘இனி நம்மல யாருமே பிரிக்க முடியாது’.. தண்டவாளத்தில் கட்டி அணைத்தவாறு தற்கொலை செய்த காதல் தம்பதி!

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…

1 hour ago

ராமதாஸ் முடிவுக்கு எதிராக போர்க்கொடி.. அன்புமணிக்கு ஆதரவாக எழுந்த முதல் குரல்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…

2 hours ago

பூப்படைந்த பட்டியலின மாணவிக்கு தனியார் பள்ளியில் அரங்கேறிய அவலம்.. அதிர்ச்சி வீடியோ!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…

3 hours ago

கோவைக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… ஜெயிலர் 2 குறித்து முக்கிய அப்டேட்!

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…

3 hours ago

This website uses cookies.