திருச்சி : திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மகன் சூர்யா சிவாவை கண்டோன்மென்ட் காவல்துறையினர் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதியில் கடந்த 11-ந் தேதி இரவு நடைபெற்ற விபத்து தொடர்பாக பாஜக ஓபிசி மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா(எம்.பி.சிவா மகன்) திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக சற்று நேரத்திற்கு முன்பு திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து இந்த வழக்கு தொடர்பாக தன்னை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மிரட்டி வருவதாகவும், தன்னை கைது செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாகவும் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் புதிய புகாரின் பேரில் தன்னை காவல்துறையினர் கைது செய்ய முனைந்து இருப்பது கண்டிக்கதக்கது என தெரிவித்தார்.
இந்நிலையில் சூர்யா சிவா கைது செய்யப்பட்டு கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் கண்டோன்மென்ட் காவல் நிலைய முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் சூர்யா மீது அளிக்கப்பட்ட புகாரில், தனது கார் மீது தனியார் பேருந்து மோதியதால் சேதமடைந்ததாக கூறி தனியார் நிறுவனத்தின் வேறு ஒரு பேருந்தை கடத்தி சென்றதாகவும் அத்துடன் பேருந்து உரிமையாளரை ரூ 5 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.