Categories: தமிழகம்

அரசு இடத்தை வளைத்து போட்ட திமுக பிரமுகர் : சாலை போட வந்த அதிகாரிகளுக்கு மிரட்டல்… கம்பி எண்ணும் கணவன், மனைவி!!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட செருகளத்தூர் ஊராட்சியில் உள்ள சித்தாடி ஸ்டாலின் நகரில் 600 மீட்டர் தார்சாலை அமைப்பதற்கு  9.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஜனவரி மாதம் டெண்டர் விடப்பட்டது.

அதை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாலை போடும் பணியை ஒப்பந்தகாரர் தொடங்கியுள்ளார்.  அப்போது அதே பகுதியில் வசிக்கும் சித்தாடி திமுக கிளை செயலாளரான உலகநாதன் குடும்பத்தினர் இந்த சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

உலகநாதன் குடும்பத்தினர் சாலையை ஆக்கிரமித்து வேலி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை அகற்றுமாறு அதிகாரிகள் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மூன்று மாதங்கள் கழித்து தற்போது சர்ச்சைக்குரிய அந்த இடத்தை விட்டு விட்டு சாலைப் பணியினை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். 

அப்போது உலகநாதன் மற்றும் குடவாசல் ஒன்றிய திமுக மகளிரணி தலைவியான அவரது மனைவி ஜெசி ப்ளோரா ஆகியோர் அரசு ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் கொலை மிரட்டல், தகாத வார்த்தைகளில் திட்டுதல், அத்துமீறி நுழைதல்,அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து உலகநாதனை நன்னிலம் கிளை சிறையிலும்,ஜெசி ப்ளோராவை திருவாரூர் மகளிர் கிளை சிறையிலும் அடைத்துள்ளனர்.

சாலை பணிகளை துரிதப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் ஆளுங்கட்சி பிரமுகர்களே அதை தடுத்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை போன்ற கட்சி நிர்வாகிகளால் ஆளும்கட்சிக்குத்தான் கெட்ட பெயர் என்று பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

6 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

7 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

8 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

8 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

9 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

9 hours ago

This website uses cookies.