Categories: தமிழகம்

நான் ஆளும் கட்சி வேட்பாளர் : போலீசாருடன் மல்லுக்கட்டிய திமுக பிரமுகர்…

நாகப்பட்டினம் : நாகப்பட்டினத்தில் வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் அலுவலகத்திற்குள் செல்ல வேட்புமனு தாக்கல் செய்த படிவத்தை காண்பிக்க கூறிய போலீசாருடன் திமுக வேட்பாளர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நாகை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நாகப்பட்டினம் நகராட்சியில் நாகூர் 7வது வார்டில் போட்டியிடும் திமுக நாகூர் நகர செயலாளர் செந்தில் தனது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களோடு வேட்பு மனு பரிசீலனைக்கு வந்துள்ளார். அப்போது, அவரை போலீசார் தடுத்து நிறுத்தி வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதி என கூறியுள்ளனர். இதனால், நகர செயலாளர் செந்திலுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது செந்தில், ‘நான் தான் வேட்பாளர்’ என்று கூறினார். அதற்கான வேட்புமனு தாக்கல் செய்த படிவத்தை காண்பிக்குமாறு போலீசார் கூறினர். அதற்கு அவர், ‘நான் ஆளும் கட்சி என்றும், ரிசிப்ட் காமிச்சாதான் உள்ள அனுப்புவீர்களா?’ என்று போலீசாரிடம் செந்தில் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். அதற்கு போலீசார், ‘ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி ,யாராக இருந்தாலும் சரி வேட்பாளர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி. மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்த படிவத்தை காண்பித்தால் மட்டுமே உள்ள அனுமதிக்கப்படும்’ என்று கூறியதால் தொடர் வாக்குவாதம் ஏற்ப்பட்டது. இதையடுத்து, திமுகவினர் அவரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர்.

KavinKumar

Recent Posts

நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!

ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…

46 minutes ago

நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…

49 minutes ago

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

1 hour ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

2 hours ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

2 hours ago

நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…

இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…

3 hours ago

This website uses cookies.