Categories: தமிழகம்

பூனை குட்டியை கவ்வுவது போல் காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் திமுக : கிருஷ்ணசாமி கண்டனம்!!!

பூனை குட்டியை கவ்வுவது போல் காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் திமுக : கிருஷ்ணசாமி கண்டனம்!!!

அரசியல் லாபம் பார்க்காமல் தமிழகத்தின் நலன் கருதி காவிரி நதிநீர் பங்கீட்டில் திமுக அரசு செயல்பட வேண்டும். புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பேட்டி

காவிரி நதிநீர் ஆணையத்தின் படி ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை வந்து சேர வேண்டிய பங்கு இட்டு நீர் முறையாக வந்து சேரவில்லை.

கர்நாடகாவில் தோழமைக் கட்சியாக காங்கிரஸ் இருப்பதால் தமிழக அரசு போதி அளவில் அழுத்தம் கொடுக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் குருவை சாகுபடி நீர் இல்லாமல் பெருகிவிட்டது.

நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நதிநீரை சரியாக பங்கிட்டு வழங்க வேண்டும். இதனை கண்டித்து வரும் 16ஆம் தேதி தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சி போராட்டத்தில் ஈடுபட உள்ளது.

அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பது போல் ஆளுங்கட்சியான திமுகவும் நதிநீர் பங்கீட்டுக்காக போராட வேண்டும். கர்நாடக முதல்வர் மற்றும் நீர் பாசன துறை அமைச்சரை சந்தித்து நீர் பங்கிட்டினை முறைப்படுத்த வேண்டும். பூனை குட்டியை கவ்வுவது போல் மென்மையாக அழுத்தம் கொடுக்கிறது திமுக அரசு.

கடுமையாக மோதாமல் கூட்டணியில் இருந்து வெளியேறி விடுவோம் என மென்மையாக நடந்து கொள்கிறார்கள். இதில் திமுகவும் காங்கிரசும் இரட்டை வேடம் போடுகிறது.

கர்நாடகவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யாமல் வேறு கட்சி இருந்திருந்தால் திமுகவும் போக்கு இப்படித்தான் இருந்திருக்குமோ.
டெல்டா பாசன நெற்கதிரை நம்பி எட்டு கோடி தமிழக மக்கள் இருக்கின்றனர். அரசியல் லாபம் பார்க்காமல் தமிழகத்தின் நலன் கருதி திமுக அரசு செயல்பட வேண்டும்

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி 311 ன் படி இடைநிலை ஆசிரியருக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என வாக்குறுதி அளித்து இதுவரை வழங்கப்படவில்லை.

அவர்கள் கமிட்டி போட்டு தீர்மானிப்போம் என்று வாக்குறுதியில் கூறவில்லை வாக்குறுதியில் கூறியது போல வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதேபோல் ஆசிரியர்களின் தலைவர்கள் பொறுப்பாளர்களிடம் முதல்வர் கலந்தாய்வு அதற்கு தீர்வு காண வேண்டும்.

அதேபோல் தமிழக அரசின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு பகுதி நேர ஆசிரியர்கள் என்பதை நீக்கிவிட்டு முழு நேர ஆசிரியர் பணிக்கு நியமனம் செய்ய வேண்டும்.

தற்பொழுது 10 ஆண்டுகள் 5 ஆண்டுகள் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களை தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக நியமனம் செய்ய வேண்டும் என பேசினார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

13 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

13 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

14 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

14 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

14 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

15 hours ago

This website uses cookies.