அதிமுக தேர்தல் அறிக்கையை பார்த்து அலறும் திமுக : திருவள்ளூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விமர்சனம்..!!!
திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் போரக்ஸ் நகரில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் திருவள்ளூர் பாராளுமன்ற தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி அவர்களை அறிமுகம் செய்து வைத்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவரை ஆதரித்து 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் பாஜகவை தோல்வி பெற செய்யவேண்டும் எனவும் அனைவரும் சிறப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
பின்னர் பேசிய பாராளுமன்ற வேட்பாளர் நல்லதம்பி அறிமுக கூட்டமை வெற்றி கூட்டமாக சிறப்பாக அமைந்து விடுவதாகவும் 2011 ஆம் ஆண்டு அதிமுக தேமுதிக கூட்டணி திமுகவை எதிர்க்கட்சியாக கூட இல்லாமல் செய்ததைப் போன்று பாராளுமன்றத் தேர்தலில் பாராளுமன்றத்தில் திமுகவினர் இல்லாமல் செய்யும் அளவிற்கு அதிமுக தேமுதிக கூட்டணி தமிழகம் முழுவதும் 39 இடங்களிலும் மாபெறும் வெற்றி பெறும் என்று கூறினார்.
அதிமுக தேமுதிக கூட்டணி தேர்தல் அறிக்கையை பார்த்து திமுக அலறி கொண்டிருக்கிறது என அவர் தெரிவித்தார். இதில் முன்னாள் அமைச்சர்கள் ரமணா மாதவரம் மூர்த்தி அப்துல் ரஹீம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் பொன் ராஜா கேஎம்டில்லி ராகேஷ் ஆரம்பாக்கம் சுரேஷ் முல்லைவேந்தன் மெதூர் ஊராட்சி செயலாளர் ரமேஷ் சேகர் ஆரணி ஜெகதீசன் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.