மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர்களை கருணை கொலை செய்து விடலாமே என திமுக ஒன்றிய குழு உறுப்பினர் முகநூலில் பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியை சேர்ந்தவர் திருக்குமரன். திமுக கட்சியை சேர்ந்த இவர் பெரியவரிகம் 6வது திமுக மாதனூர் ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், இவர் தனது முகநூல் பக்கத்தில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களை கருணை கொலை செய்து விடலாமே என்றும், மக்கள் பணி செய்ய முடியாமல் தவிப்பதாக பதிவு செய்திருந்தது பெரும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர் திருக்குமரனிடம் கேட்ட போது, “நான் 6வது வார்டு பெரியவரிகம் துத்திப்பட்டு மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினராக உள்ளேன். மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார், துணை தலைவர் சாந்தி சீனிவாசன் ஆகியோர் மாதனூர் ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு எந்த ஒரு வேலையும் கொடுப்பதில்லை. டெண்டரும் முறைப்படி இல்லை. ஒன்றிய குழு கூட்டமும் சரியாக வைப்பது இல்லை. கவுன்சிலர்களையும் யாரும் மதிப்பது இல்லை. மனம் வெறுத்து போய் பதிவு செய்தேன்.
மேலும், இந்த மூன்று வருடத்தில் பெரியவரிகத்தில் ஒரு சில வேலைகள் மட்டுமே செய்துவிட்டு, மற்ற வேலைகளை ஒன்றிய தலைவர் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு தெரியாமலேயே செய்து விடுகிறார்கள். இது தொடர்பாக பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை, எனக் கூறினார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிவிக்கும் அவர், கிளை செயலாளராக இருந்த போது இருந்த மரியாதை கூட தற்போது கட்சியில் இல்லை என்றும், தேர்தலில் 15 லட்சம் செலவு செய்து வெற்றி பெற்று மக்கள் பணிகளை செய்ய விடாமல் ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர் தடுக்கின்றனர் எனவும், மனம் வெறுத்து உட்கார்ந்து உள்ளேன், என தெரிவித்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.