திருவள்ளூர் : முன்விரோதம் காரணமாக தன்னை மிரட்டுவதாக பெண் கவுன்சிலர் காவல்நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மெய்யூர் ஊராட்சியில் வசித்து வருபவர் தேன்மொழி .இவர் பூண்டி ஒன்றியத்தில் நான்காவது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார்.
இதே பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் வேல்முருகனக்கும், தேன்மொழி கணவர் ஏழுமலைக்கும், கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சில நாட்களாக கவுன்சிலர் தேன்மொழி மீது அவதூறு செய்திகளை பரப்புவதும், ஊராட்சி சார்ந்த பணிகளை செய்யவிடாமல் தடுப்பதாகவும், தட்டி கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி கவுன்சிலர் தேன்மொழி பெரியபாளையம் காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார்.
இந்த புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து கிராம பொதுமக்களுடன் இணைந்து பெண் கவுன்சிலர் தேன்மொழி பெரியபாளையம் காவல் நிலையத்தை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.