கணவரின் அராஜகத்தை கண்டுகொள்ளாத திமுக பெண் கவுன்சிலரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 51வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் நிரஞ்சனா. இவருடைய கணவர் ஜெகதீசனும் திமுகவைச் சேர்ந்தவர். ஏற்கனவே, பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் நிர்வாகங்களில் தலையிடுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகளும், புகார்களும் வந்தனர். இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலினே நேரடியாக தலையிட்டு, பெண் கவுன்சிலர்கள் தங்களுடைய பணிகளில் கணவரை அனுமதிக்ககூடாது என கண்டிப்பான உத்தரவை போட்டுள்ளார்.
இதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் பல்வேறு கவுன்சிலர்களின் கணவர்கள் தொடர்ந்து நிர்வாகத்தில் தலையிட்டு வருகின்றனர். அப்படித்தான் திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசனும் செய்து வருகிறார். நான் தான் கவுன்சிலர் என்ற நினைப்பில் நடந்து கொள்ளும் அவர், வியாபாரிகளிடம் மாமூல் வசூலிப்பது, அதிகாரிகளை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்துக்களை செய்வது என தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அண்மையில் ரோந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகளும் சமூகவலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து திமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
சாலையோர வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கில் சிறைக்கு சென்று விட்டு வெளியே வந்த அவர், மாநகராட்சி 51வது வார்டு உதவி செயல் பொறியாளரை தாக்கி உள்ளார். இதையடுத்து, ஜெகதீசன் மீது அடுக்கடுக்கான புகார்கள் திமுக தலைமைக்கு சென்றது.
இந்நிலையில், தனது கணவரின் அராஜகப்போக்கை கண்டிக்காத பெண் கவுன்சிலர் நிரஞ்சனா மீது திமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 51-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் நிரஞ்சனா ஜெகதீசன் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வந்ததால் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.