கோவை: திமுக பெண் கவுன்சிலர் சொத்தை அபகரிப்பு செய்ய முயற்சித்ததாகவும், கொலை செய்ய திட்டம் தீட்டியதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வயதான தம்பதியனர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உடையம்பாளையம் திருமலை நகர் பகுதியை சேர்ந்த வயதான தம்பதியினர் மஞ்சுளா,சிவகுமார் இவர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பதியானர் கோவையில் உள்ள தங்களுக்கு சொந்தமான மருந்து கம்பெனி உள்ளதாகவும் தங்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தன்னுடைய மகள் பிரிய தர்ஷினி கம்பெனியை கவனித்து வந்ததாக தெரிவித்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு தற்போது உள்ள கோவை மாநகராட்சி 3வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் கவிதா என்பவர் அந்த மருந்து கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததாகவும், கடந்த 2ஆண்டுகளாக தங்களுடைய மகளான பிரியதர்ஷினியை கைக்குள் போட்டு கொண்டு சொத்தை அபகரிக்கும் நோக்கில் கவிதா என்பவர் தம்பதியினருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக தெரிவித்தார்.
அதே போல் தன் மகளிடம் இருந்து ரூ.5 லட்சத்திற்கும் மேல் பணம் பறித்துள்ளதாகவும், தங்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்றபோது கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதனால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளதாகவும், அதே போல் முதலமைச்சருக்கு புகார் மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் கவிதா என்பவர் வயதான தம்பதியனரை கொலை முயற்சி செய்ததாக பிரியதர்ஷினி கணவர் பூபதியிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.