தனது கட்சியை சேர்ந்தவர்களே தன்னை கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விடுவதாக திமுக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தென்காசி மாவட்ட ஊராட்சி குழு தலைவராக ஆலங்குளம் பகுதி திமுகவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி இருந்து வருகிறார். இந்த நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தார்.
தனது பகுதியை சேர்ந்த சக திமுக நிர்வாகிகளால் தான் மிரட்டப்படுவதாகவும், தன்னை அவர்கள் கொன்று விடுவதாகவும் கூறி, தனது வீட்டிற்கு வந்து தன்னை அச்சுறுத்தி சென்றதாகவும் அவர் புகார் கூறினார்.
மேலும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப கேட்டால், அவதூறாக தங்கள் மீது தலைவர் தமிழ்ச்செல்வி குற்றச்சாட்டு தெரிவிப்பதாக எதிர்தரப்பினர் கூறியுள்ளனர்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.