திருவள்ளூர் : நரிக்குறவர்களால் திமுகவுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்று திமுக பெண் நிர்வாகி சேலம் சுஜாதா பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நகர்மன்றத் தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் ஏற்பாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் திமுக மாநில மகளிர் அணி பரப்புரை குழு செயலாளர் சேலம் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக பெண் நிர்வாகி சுஜாதா, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை பைத்தியம் எனக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பைத்தியக்காரன் என்றும், நன்றாக நடித்தவர் தற்போது விஜயகாந்த்க்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றும் கூறினார். மேலும், பைத்தியம் போல அண்ணாமலை உளர்வதாகவும், திமுக அமைச்சர்களை திட்டுவதாகக் கூறி தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.
மேலும், நரிக்குறவர்களால் ஒரு பிரயோஜனமும் கிடையாது என்றும், வாட்ஸ்அப் செய்தியை பார்த்து அவர்கள் அழைத்ததற்கு முதல்வர் அவர்களின் வீட்டிற்கே சென்றார் என திமுக நிர்வாகி சுஜாதா பேசியது கூட்டத்தில் இருந்தவர்களையே அதிருப்தியடையச் செய்தது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.